2 மத்திய அமைச்சர்கள் ஒரே நாளில் ராஜினாமா

by Editor / 06-07-2022 11:25:34pm
2 மத்திய அமைச்சர்கள் ஒரே நாளில் ராஜினாமா

பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மத்திய அமைச்சர்கள் ஆர்சிபி சிங், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் தங்களுடைய அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளனர். இருவரும் வகித்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நாளை ஜூலை 7ஆம் தேதி நிறைவடைகிறது
ராஜினாமா செய்துள்ள  மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு நிறுத்தப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 


 

Tags : 2 Union Ministers resign on the same day

Share via