சங்கடப்படாமல் சாலையை போட்ட அதிகாரி பணியிடை நீக்கம்
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வளர்ச்சி பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது. இதில் காளியம்மன் கோவில் பகுதியில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை அகற்றாமல் அதன் டயர்கள் மேல் சிமெண்ட் கலவைகள் பதிந்தவாறு சாலை போடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் இது தொடர்பாக, விசாரணை மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் இந்த பணிகளுக்கு பொறுப்பாளராக இருந்த 3-வது மண்டல உதவி பொறியாளர் பழனியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Tags : Dismissal of the officer who laid the road without embarrassment