பாபநாசம் அணை கார் சாகுபடிக்காக திறக்கப்பட்டது
நெல்லை மாவட்டம் பாபநாசம் அணை கார் சாகுபடிக்காக இன்று திறக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவு அணையில் இருந்து தண்ணிரை திறந்துவிட்டார். இதன் மூலம் நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்.
நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து கார்சாகுபடிக்காக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் இன்று முதல் 137 நாட்களுக்கு திறந்துவிடப்படும் என தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
இதனடிப்படையில் தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு , பாபநாசம் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார். வடக்கு கோடை மேலழகியான், தெற்கு கோடை மேலழகியான், நதியுன்னி, பாளையங் கால்வாய், திருநெல்வேலி கால்வாய், மருதூர் கால்வாய் உள்ளிட்ட 11 கால்வாய்கள் மூலம் நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள்பாசன வசதியை பெறும். அணையிலிருந்து நீரை திற சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு கூறுகையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டிருந்தார் அதன் அடிப்படையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது வினாடிக்கு ஆயிரத்து 400 கனஅடி வீதம் 137 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் தேவைக்கேற்ப தண்ணீர் வழங்கப்படும் அளவு அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார்
தற்போது பாபநாசம் அணையின் நீர்மட்டம் 136 அடியாக உள்ளது அணைக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பாபநாசம் அணைக்கு இன்னும் சில தினங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து விடும் ஏற்கனவே அணையில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் இந்த ஆண்டு விவசாயம் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டு தோறும் ஜூன் முதல் வாரத்தில் கார் சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தண்ணீர் திறக்கப்படவில்லை, மீண்டும் திமுக ஆட்சியிலேயே அணையிலிருந்து முறையாக ஜூன் 1ஆம் தேதி விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :