காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய பக்தர்களைக் கயறு மூலம் பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்

by Editor / 29-07-2022 02:44:30pm
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய பக்தர்களைக் கயறு  மூலம் பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்

விருதுநகர்  மாவட்டம் சதுரகிரி மலைக்கு  ஆடி அம்மாவாசை சென்ற பக்தர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டனர். தேனி மாவட்டத்திலுள்ள உப்புத்துறை மலைப்பாதை வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் நள்ளிரவில் பெய்த மழையால் யானை கஜம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் 200க்கும் அதிகமான பக்தர்கள் சிக்கிக்கொண்டனர் .அங்கிருந்த காவல்துறையினர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர் இதையடுத்து கயிறு மூலம் பக்தர்கள் மீட்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

Tags :

Share via