கோவிலுக்கு கூல் காய்ச்சிய முதியவர் பலி

by Editor / 30-07-2022 11:24:32am
கோவிலுக்கு கூல் காய்ச்சிய முதியவர் பலி

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் மேலத்தெரு பகுதியில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு நேற்று  பக்தர்களுக்கு வழங்க ஆறுக்கும் மேற்பட்ட அண்டாக்களில் கூழ் காய்ச்சப்பட்டது. அப்பொழுது கூழ் காய்ச்சும் பணியில் இருந்த  பழங்காநத்தம் மேலத்தெரு பகுதியை சேர்ந்த முருகன் எதிர்பாராதவிதமாக வலிப்பு ஏற்பட்டு கொதித்துக் கொண்டிருந்த கூழ் பாத்திரத்தின் மீது விழுந்தார். இதில் அவர் உடல் முழுவதும் கூழ் கொட்டியதால் பலத்த காயமடைந்தவர் உடனடியாக  ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

 

Tags :

Share via