இந்தியாவில் புதிதாக 5,747 பேருக்கு கொரோனா தொற்று

by Staff / 17-09-2022 01:23:30pm
இந்தியாவில் புதிதாக 5,747 பேருக்கு கொரோனா தொற்று

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 5,747 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,45,22,774 லிருந்து 4,45,28,524 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 5,618 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும் இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 29 பேர் பலியாகினர். இதுவரை 5,28,302 பேர் உயிரிழந்தனர்.

 

Tags :

Share via