கலவரத்திற்கு அழைப்பு 3 பேரைச் சிறப்புப் புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் தனியார்ப் பள்ளியில் படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஸ்ரீமதி, உயிரிழந்த விவகாரத்தில், கடந்த 17-ஆம் தேதி அன்று பள்ளி முன்பு நீதி கேட்டு இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வன்முறையாக மாறி கலவரத்தில் முடிந்த நிலையில், கலவரத்தில் ஈடுபட்டவர்களைச் சிறப்புப் புலனாய்வுக் குழு போலீசார் கைது செய்து வருகிறனர்.
அந்த வகையில் மாணவிக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி அதில் பல்வேறு ஆட்களைச் சேர்க்கும் வகையில் ஸ்ரீ மதிக்கு நீதி வேண்டும் என்ற வாட்ஸ் அப் குழு அட்மினான சேப்பாக்கம் நடுத்தெருவைச் சேர்ந்த விஜய் என்பவரை கைது செய்தனர்.
அதே போல whatsapp குழுக்களின் லிங்க்குகளை பல்வேறு இளைஞர்களுக்கு அனுப்பி குழுவில் சேர அழைப்பு விடுத்த துரைப்பாண்டி,அய்யனார் ஆகியோரை சிறப்புப் புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளனர்.
Tags : Special Investigation Division police arrested 3 people for calling riots