ரூ.43 ஆயிரம் கோடியில்  அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்  தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்

by Editor / 05-06-2021 04:10:21pm
ரூ.43 ஆயிரம் கோடியில்  அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்  தயாரிக்க  மத்திய அரசு ஒப்புதல்




ரஷ்யாவின் அகுலா 2 என்ற நீர்மூழ்கிக் கப்பலை 10 ஆண்டுகள் குத்தகைக்கு இந்தியா கடந்த 2012ம் ஆண்டு எடுத்திருந்தது. சுமார் 8 ஆயிரத்து 140 டன் எடை கொண்ட அந்தக் கப்பல் ஐஎன்எஸ் சக்ரா 2 என்ற பெயருடன் இந்திய கப்பல் படையில் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வந்தது.
இந்திய எல்லைப் பாதுகாப்பிலும், எதிரி நாட்டு போர்க்கப்பல்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்த கப்பலின் பணி மகத்தானதாகும். தற்போது, இந்தக் கப்பலின் குத்தகை காலம் முடிவுக்கு வந்த நிலையில், பராமரிப்பு பிரச்சனைகள் காரணமாக, மீண்டும் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதனிடையே, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்வதில் முழு தீவிரம் காட்டி வருகிறது. அதனடிப்படையில், மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் 6 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை 43 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உள்நாட்டிலேயே தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. வெளிநாட்டு தளவாட தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து இந்திய நிறுனங்கள் உள்நாட்டில் தயாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த மசகன் டக் மற்றும் எல் & டி என்ற தனியார் கட்டுமான நிறுவனங்கள், 5 வெளிநாட்டு கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து விரைவில் பணியை துவக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via