குப்பை கொட்டுவதில் இரண்டு குடும்பங்களுக்கு இடையே தகராறு ஒருவர் அடித்துக் கொலை 5 பேர் கைது

by Editor / 08-08-2022 05:12:00pm
குப்பை கொட்டுவதில் இரண்டு குடும்பங்களுக்கு இடையே தகராறு ஒருவர் அடித்துக் கொலை 5 பேர் கைது


தேனி அருகே குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட பிரச்சனையை தடுக்க சென்ற நபரை அடித்து கொன்றதாக கூறப்படும் சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.புதிபுரத்தில்  வசிக்கும் ராதாகிருஷ்ணன் நேற்று மது போதையில் வந்து குப்பை கொட்டும் பிரச்சனையில் ஊர்காவலன் என்பவரின் சமூகத்தைப் பற்றி தவறாக பேசியதாக கூறப்படுகிறது ஊர்க்காவலன் உறவினர் மகேஷ்குமார் தனிப்பட்ட பிரச்சினைக்காக இதற்கு தனது சமூகத்தை இழிவாக பேசிய என கேள்வி எழுப்பி அதில் ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன் அவர் மீது கல்லை தூக்கி எறிந்த தோடு தடுக்க வந்த இருவரையும் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த மூவரில் மகேஷ்வரகுமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். அடுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் தகவலறிந்த நிகழ்விற்கு விரைந்த போலீசார் ராதாகிருஷ்ணன் உள்பட 5 பேரை கைது செய்தனர்

 

Tags :

Share via