படுத்துக்கொண்டு சிகரெட் பிடித்த பாபி கட்டாரியா மீது போலீசார் வழக்குப் பதிவு
துபாயில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் அந்த விமானத்தில் பயணித்த பல்விந்தர் கட்டாரியா என்பவர், விதிகளை மீறி விமானத்தில் சிகரெட் பற்றவைத்து படுத்துக்கொண்டே புகைபிடித்தார். அவர் புகை பிடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் அவர் மீது விசாரணை நடத்த மத்திய விமானப் போக்குவரத்துஅமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில், பல்விந்தர் கட்டாரியா மீது விமான போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் விமானத்தில் சிகரெட் பிடிக்கும் வீடியோ குறித்தும் பாபி கட்டாரியா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நடுரோட்டில் அமர்ந்து பாபி கட்டாரியா மது குடித்த வீடியோவும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Tags :