தமிழகத்தில் தண்டோரா போடும் நடைமுறைக்கு தடை

by Editor / 12-08-2022 11:05:12pm
தமிழகத்தில் தண்டோரா போடும் நடைமுறைக்கு தடை

தமிழகத்தில் தண்டோரா போடும் நடைமுறைக்கு தடைவிதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இது தொடர்பாக அரசு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, வெளியிட்டுள்ள உத்தரவில், "சட்டம் மற்றும் ஒழுங்கு, இயற்கை இடர்பாடுகள் மற்றும் இன்ன பிற அரசின் முக்கிய செய்திகளை பொது மக்களிடம் விரைவாக கொண்டு சேர்க்கும் பொருட்டு, விளம்பரம் செய்யும் விதமாக காலம் காலமாக நடைமுறையில் இருந்த பழக்கமான 'தண்டோரா' போடும் முறை எந்தெந்த துறைகளில் நடைமுறையில் உள்ளதோ, அதற்கு முழுமையாக தடை விதித்து உத்தரவிடப்படுகிறது. மாற்று ஏற்பாடாக, அரசின் முக்கிய செய்திகளை மிக விரைவாக மக்களிடம் சேர்க்கும் விதத்தில், பொருத்தமான வாகனங்களில் ஒலி பெருக்கிகளை பொருத்தி, விளம்பரம் செய்வதை நடைமுறைப்படுத்தலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via