உணவகத்தில் ரகளை செய்த விமானப் பணிப்பெண் உட்பட 5 பேர் கைது

by Editor / 13-08-2022 04:09:47pm
உணவகத்தில் ரகளை செய்த விமானப் பணிப்பெண் உட்பட 5 பேர் கைது

ஜெய்ப்பூரில் உள்ள ஒரு உணவகத்தில் மதுபோதையில் ரகளை செய்த விமானப் பணிப்பெண் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு உணவகத்தில் குடிபோதையில் ரகளை செய்ததாக விமானப் பணிப்பெண் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். விமானப் பணிப்பெண் பிராச்சி சிங் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த புதன்கிழமை உணவகத்தில் ஒரு குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

உணவகத்தை விட்டு வெளியேறிய பிறகு, அந்தக் குழு பீர் பாட்டிலைப் பயன்படுத்தி குடும்பத்தினரின் காரின் கண்ணாடியை உடைத்தது. குடும்பத்தினரின் புகாரை அடுத்து, பிராச்சி சிங், அவரது கணவர் கார்த்திக் சவுத்ரி, விகாஸ் கண்டேல்வால் மற்றும் நேஹா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் ஜாமீன் வழங்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தார். எதிர் தரப்பைச் சேர்ந்த விஷால் துபே மற்றும் ஆர்யா ஆகியோரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

உணவகத்தில் ரகளை செய்த விமானப் பணிப்பெண் உட்பட 5 பேர் கைது
 

Tags :

Share via