கோத்தபய ராஜபக்சே அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற க்ரீன் கார்ட் விண்ணப்பித்து உள்ளதாக தகவல்

by Editor / 19-08-2022 01:42:27pm
கோத்தபய ராஜபக்சே அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற க்ரீன் கார்ட் விண்ணப்பித்து உள்ளதாக தகவல்

இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற கிரீன் கார்ட் விண்ணப்பித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி கடும் எதிர்ப்புகளால் பதவியை விட்டு விலகி கடந்த மாதம் அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். இந்தநிலையில் அவர் அமெரிக்க குடியுரிமை கோரி காத்திருப்பதாக கூறப்படுகிறது. அவர் மனைவி ஏற்கனவே அமெரிக்க குடியுரிமை பெற்று இருப்பதால் அதற்கான தகுதி இருப்பதாகவும் சட்டபூர்வமான பணிகளில் அவர் வழக்கறிஞர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via