ரயில் நிலையத்தில் மோதல் கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது.

by Editor / 27-08-2022 10:06:24am
 ரயில் நிலையத்தில் மோதல் கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது.

ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் கடந்த 16ஆம் தேதி பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் கத்தி,ஜல்லி கற்களால்  தாக்கிக் கொண்ட சம்பவத்தில் தக்கோலம் பகுதியை சேர்ந்த பச்சையப்பன் கல்லூரி மாணவன்  தினேஷ் என்ற இளைஞருக்கு தலையில் அருவாள் வெட்டு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  இந்த வழக்கில் ஏற்கனவே இரண்டு இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள்  மெர்லின்.(19) சுமன்(எ) சூர்யா ஆகிய இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் ரயில்வே இருப்பு பாதை காவல்துறையினர் நடவடிக்கை.
 

 

Tags :

Share via