கள்ளக்காதலியை சுவரில் தள்ளி கொலை

by Staff / 16-02-2023 11:47:00am
கள்ளக்காதலியை சுவரில்  தள்ளி கொலை

சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் சமீபத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்தது. முகமது சுல்தான் (22) என்பவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இம்ரானா (42) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரது கணவர் எச்சரித்தும், காதலனுடனான தொடர்பை நிறுத்தவில்லை. மேலும், இம்ரானா தனது காதலனுக்கு பலமுறை பணம் கொடுத்து உதவி வந்துள்ளார். அதனை திருப்பிக் கேட்டபோது, ​​இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த முகமது, இம்ரானாவை சுவரில் தள்ளி மோதியதில் அவர் உயிரிழந்தார். குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via