கண்டெய்னரில் மோதி பரிதாப பலி
தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள நார்கட் பாலி நகரின் புறநகர் பகுதியில் ஒரு பயங்கர விபத்து நடந்தது. இருசக்கர வாகனத்தில் சாலையை கடந்த ஒருவர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த கண்டெய்னர் மீது மோதியுள்ளார். இந்த நிலையில், அவர் மீது கண்டெய்னர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். உயிரிழந்தவர் நல்கொண்டா நகரைச் சேர்ந்த அசோக்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து தொடர்பான காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.
Tags :