“நேற்று பெய்த மழையில் இன்று முளைத்தவர் அண்ணாமலை”செல்வப்பெருந்தகை

by Staff / 26-06-2024 04:02:48pm
“நேற்று பெய்த மழையில் இன்று முளைத்தவர் அண்ணாமலை”செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று பாஜகவை விமர்சித்துப் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “இந்திரா காந்தியின் பெருமையை விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு பெறாத ஆர்எஸ்எஸ் வழிவந்த பாஜக அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதேபோல, நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலையும் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே வரலாற்றுத் திரிபு வாதங்களை அண்ணாமலை நிறுத்திக் கொள்வது நல்லது” என எச்சரித்துள்ளார்.
 

 

Tags :

Share via