அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகளுக்கு நன்றி-முதலமைச்சர் மு க ஸ்டாலின்

by Admin / 02-11-2025 05:28:43pm
 அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகளுக்கு நன்றி-முதலமைச்சர் மு க ஸ்டாலின்

முதலமைச்சர் மு க ஸ்டாலின் எம் எக்ஸ் தலை பதிவில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகளுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்..

தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறித்து, ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் நோக்கோடு அவசரகதியில் மேற்கொள்ளப்படும் #SIR-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை! வாக்காளர் பட்டியல் திருத்தத்தைக் குழப்பங்கள் - ஐயங்கள் இல்லாமல் போதிய கால அவகாசத்துடன், 2026 பொதுத் தேர்தலுக்குப் பின்பு நடத்த வேண்டும் என்ற நமது கோரிக்கையைஇந்திய தோ்தல்  ஆணையம் ஏற்காததால், உச்சநீதிமன்றத்தை நாட இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுத் தங்களுடைய உணர்வைப் பதிவு செய்த 49 கட்சிகளின் தலைவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கூட்டத்தில் பங்கேற்காதவர்களும் தங்களுடைய கட்சிகளில் #SIR குறித்து விவாதித்து, ஜனநாயகத்தைக் காத்திடும் முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்..

 

Tags :

Share via

More stories