21ஆம் தேதி பேரவைக் கூட்டம் : சபாநாயகர் அப்பாவு தகவல்
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் வரும் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. ஆளுநர் உரைக்கு பின் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும் எனவும், சட்டமன்ற கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனநாயக முறையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும். கட்சி அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர்கள் நடத்தப்பட மாட்டார்கள் என முதலமைச்சர் ஏற்கனவே தெரிவித்துள்ளார், அனைவரையும் அரவணைத்து செல்வதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார். கூட்டத்தொடரில் பங்கேற்கும் உறுப்பினர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம். சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரலை செய்யும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :