இந்தியாவிலேயே முதன்முறையாக வாட்சப்பில் வழக்கு பற்றி அறியும் வசதியை அறிமுகம் செய்த ஐ.ஜி.அஸ்ரா கர்க்

by Editor / 13-09-2022 09:33:44pm
இந்தியாவிலேயே முதன்முறையாக வாட்சப்பில் வழக்கு பற்றி அறியும் வசதியை அறிமுகம் செய்த ஐ.ஜி.அஸ்ரா கர்க்

தென்மண்டல காவல்துறை தலைவராக  ஐ.ஜி.அஸ்ரா கர்க் நியமிக்கபட்டதிலிருந்தே தென்மண்டலகாவல்துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இதன் தொடர்ச்சியாக தென்மாவட்டங்களில் அதிகளவில் போக்சோ வழக்குகள் பதிவாகும் மாவட்டங்களில் போக்சோ வழக்குகள் நிலையை பாதிக்கப்பட்டவர்கள் வாட்ஸ் அப் மூலம் அறியும் புதிய வசதி முதற்கட்டமாக தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via