செல்போன் டவரை திருடிய கும்பல்

by Staff / 20-01-2023 12:54:40pm
செல்போன் டவரை திருடிய கும்பல்

செல்போன் டவரை மர்ம கும்பல் சேர்ந்து திருடிச் சென்ற சம்பவம் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள சப்ஜிபாக்கில் நடந்துள்ளது. கட்டிடத்தின் மீது ஏறிச் சென்ற திருடர்கள், கட்டிட உரிமையாளரிடம் ஜிடிஎல் நிறுவனத்தின் செல்போன் டவரை பழுது பார்க்கும் ஊழியர்கள் என்று கூறி, கோபுரத்தை துண்டு துண்டாக வெட்டி எடுத்துச் சென்றனர். இதுகுறித்து உரிமையாளர் நிறுவன மேலாளரிடம் கூறி 4 மாதங்களாக உள் விசாரணை நடத்தப்பட்டது. பலன் கிடைக்காததால், சமீபத்தில் போலீசில் புகார் செய்யப்பட்டது.

 

Tags :

Share via