ரேஷன் கடைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகை ரூ.1,000 சில்லறை மாற்றி வழங்கக் கூடாது. இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக மட்டுமே வழங்க வேண்டும். பணத்தை கவரில் வைத்து வழங்கக் கூடாது. அனைவரும் பார்க்கும்படி கையிலேயே வழங்க வேண்டும். பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை விநியோகிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நோயாளிகள், நடமாட முடியாத முதியவர்களுக்கு பதில் வேறு நபர்கள் வந்தால் பரிசுத் தொகுப்பை வழங்கலாம்.
Tags :