சிலிண்டர்களை குடோனில் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்த தந்தை மகன் கைது

by Staff / 14-09-2022 12:21:41pm
சிலிண்டர்களை குடோனில் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்த தந்தை மகன் கைது

சேலம் அன்னதானப்பட்டி அருகே எரிவாயு சிலிண்டர்களை குடோனில் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்த இருவரை கைது செய்த போலீசார் 200 சிலிண்டர்கள் பறிமுதல் செய்தனர் ரகசிய தகவலின் படி கேட்டு காடு பகுதியில் உள்ள குடோனில் சேலம் மாவட்டம் உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தியபோது அங்கு வணிக பயன்பாட்டு சிலிண்டர் மற்றும் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது ஒரு சிலிண்டரில் இருந்து மற்றொரு சிலிண்டருக்கு எரிவாய்வு மாற்றிக் கொடுப்பது தெரியவந்தது. இதனை அடுத்து உரிமையாளர்களான மாணிக்கம் அவரது மகன் சங்கரை கைது செய்த போலீசார் இத்தனை எரிவாயு சிலிண்டர்கள் எப்படி கிடைத்தது என விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via