உத்தரகாண்ட் மலையேற்றத்தில் கேரள பெண் மரணம்

by Staff / 07-06-2024 12:00:26pm
உத்தரகாண்ட் மலையேற்றத்தில் கேரள பெண் மரணம்

உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சில்லா-குஷ்கல்யான்-சஹஸ்த்ரா தால் மலையேற்றப் பாதையில் மலையேற்றத்தின் போது மோசமான வானிலை காரணமாக உயிரிழந்த ஒன்பது மலையேற்ற வீரர்களில் மற்றொரு மலையாளி பெண்ணும் உயிரிழந்துள்ளார். இவர் பாலக்காடு செர்புளச்சேரியைச் சேர்ந்த வி.கே. சிந்து (45) என அடையாளம் காணப்பட்டுள்ளார். டெல் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியரான சிந்து, பெங்களூரு கொத்தனூரில் வசித்து வந்தார். இதன் மூலம் மலையேற்றத்தின் போது உயிரிழந்த மலையாளிகளின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆஷா சுதாகர் (71) இறந்தார். இருவரும் கர்நாடக மலையேறும் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்.மலையேற்றம் சென்ற 22 பேர் கொண்ட குழுவில் 9 பேர் உயிரிழந்தனர். அனைவரும் பெங்களூரில் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
.
 

 

Tags :

Share via