ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை நடை இன்று திறப்பு.

by Editor / 13-09-2024 11:04:24am
 ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை நடை இன்று திறப்பு.

கேரளாவில் வரும் 15ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. புரட்டாசி மாத பிறப்பையொட்டி, சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்களுக்கு 15, 16 ஆகிய நாட்களில் ஓணம் விருந்து வழங்கப்படவுள்ளது. தொடர்ந்து, மாதாந்திர பூஜைக்காக வருகிற 21ஆம் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். இதற்கான ஆன்லைன் தரிசன முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

 

Tags :  ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை நடை இன்று திறப்பு.

Share via