தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மகன் கைது
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே குடித்துவிட்டு தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.கூடலிவயலை சேர்ந்த 50 வயது விவசாயியான ராபர்ட் கென்னடி குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அவரது மகன் ஆரோக்கிய அருள் தலையிட்டு சமாதானம் செய்த போது தனது மகனை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன் அம்மிக்கல்லை போட்டு தந்தையை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Tags :