சாமியார் திருமலை மீது ஏழு பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்துசிறையில் அடைப்பு.

by Editor / 20-09-2022 09:09:33pm
சாமியார் திருமலை மீது ஏழு பிரிவுகளின் வழக்குப் பதிவு  செய்துசிறையில் அடைப்பு.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் மூலங்குடியை சேர்ந்தவர் சாமியார் திருமலை.இவர் சீனாவில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படிக்கும் தனது மகளுக்கு  மஞ்சகுடி சிட்டி யூனியன் வங்கி கிளையில் 12 லட்சம் ரூபாய் கடன் கேட்டிருந்தார்.இதற்கு சியூமி கிளை ஜாமீன்தாரர் கேட்ட காரணத்தினால் ஆத்திரமடைந்த சாமியார் திருமலை துப்பாக்கியுடன் வாங்கிக்குள் நுழைந்து அதிகாரிகளை மிரட்டி ரகளையில் ஈடுபட்டார்.இதனை தனது முகநூல் நேரலையிலும் அவர் வெளியிட்டு இருந்தார்.இது மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுக்கு மஞ்சகுடி சியூபி கிளை மேலாளர் முத்துசாமி அளித்த புகாரின் அடிப்படையில் குடவசால் காவல்துறையினர் சாமியார் திருமலையை கைது செய்தனர். அவர் மீதுஆயுதங்களை வைத்து மிரட்டுதல் காவல் துறையினரை மிரட்டுதல் தடை செய்யப்பட்ட இடத்தில் புகைப்பிடித்தல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தற்போது நன்னிலம் கிளை சிறையில் அடைத்துள்ளனர்.

 

Tags :

Share via