இந்தியாவில் புதிதாக 4,912 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் புதிதாக 4,912 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,45,63,337ஆக உயர்ந்தது. மேலும் புதிதாக 38 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,28,487-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 5,719-பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,39,90,414 -ஆக உயர்ந்துள்ளது.
Tags :