கல்லூரி மாணவர்களுக்கு கட்டண சலுகை மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு?
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்காக ரயில் நிலையம் அருகில் உள்ள கல்லூரி மாணவர்கள் இந்த ரயிலை முழுமையாகபடுத்தும் வண்ணம் மெட்ரொ ரெயில் நிறுவனம் பல்வேறுகட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு அதறகான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் அனைத்து கல்லூரிகளுக்கும் மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவா்களை நேரடியாக சந்தித்து பேசி வருகின்றனர்.மாணவர்களுக்கு டிக்கெட் கட்டண சலுகையும் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவ, மாணவிகள் சரியான நேரத்திற்கு, பாதுகாப்பாகவும், விரைவாகவும் கல்லூரிக்கு சென்று திரும்ப முடியும்.
Tags :