தென்காசி வ.உ.சி வட்டாரநூலகர் பிரமநாயகத்திற்கு தேசிய விருது
சென்னையில் செயல்பட்டு வரும் SALIS (SOCIETY FOR ADVANCEMENT OF LIBRARY AND INFORMATION SCIENCE) சமூக முன்னேற்றத்திற்கான நூலக தகவல் அறிவியல் அமைப்பானது ஆண்டுதோறும் மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் சிறப்பாக சேவையுடன் செயலாற்றி வரும் நூலகர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது.
2020ம் ஆண்டிற்கான டாக்டர்.வெங்கிடுசாமி தேசிய நல்நூலகர் விருதிற்கு, தென்காசி வ.உ.சி வட்டார நூலக நூலகர் சூ.பிரமநாயகம் அவர்களை சாலிஸ் நிறுவனர் டாக்டர் ஹரிகரன் தலைமையிலான தேர்வுக்குழு தேர்ந்தெடுத்து உள்ளது. இவ்விருது 14.10.2022 அன்று திருசெங்கோட்டில் கே.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் தேசிய மாநாட்டில் வழங்கப்பட உள்ளது.
கடந்த 31ஆண்டுகள் நூலகப் பணியில் தமிழக அரசின் மாநில நல்நூலகர் விருதினை 14-11-1994 அன்றும், 2002ம் ஆண்டு நல்நூலகர் விருதினை 24.11.2002 அன்றும் பெற்றுள்ள சூ.பிரமநாயகம், தொடர்ந்து ஆற்றிவரும் நூலக வளர்ச்சிப்பணிகள், போட்டிதேர்வு மாணவர்களுக்கு இலவச பயிற்சி தேர்வு, பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள், புத்தக கண்காட்சி, நூலக வாரவிழாக்கள் உள்ளிட்ட நூலக வளர்ச்சிப்பணிகளுக்கு அங்கீகாரம் வழங்கிடும் வகையில் தேர்வு செய்துள்ளனர்.சாலிஸ் அமைப்பின் டாக்டர்.வெங்கிடுசாமி தேசிய நல்நூலகர் விருது 14.10.2022 அன்று வழங்கப்பட உள்ளது.
Tags :