பிஎப்ஐ அமைப்பின் இணையதள பக்கம் முடக்கம்

by Staff / 28-09-2022 02:11:00pm
பிஎப்ஐ அமைப்பின் இணையதள பக்கம் முடக்கம்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பை மத்திய அரசு இன்று சட்டவிரோத அமைப்பாக அறிவித்தது. மேலும், பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து அதிரடி உத்தவை பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளின் அலுவலகங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையையும் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பிஎப்ஐ-வின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது. தொடர்ந்து அதன் சமூகவலைதள பக்கங்களையும் முடக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

Tags :

Share via