திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

by Staff / 03-10-2022 12:42:29pm
திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக ராஜேஷ்குமார் எம்பி தேர்வு . .. இதை கொண்டாடும் வகையில் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கும் மாநில இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர்.. இந்த நிகழ்ச்சி எருமைப்பட்டி ஒன்றிய பொருளாளர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். எருமப்பட்டி பேரூர் செயலாளரும், எருமைப்பட்டி பேரூராட்சி தலைவர் பழனியாண்டி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் பவித்ரம் கண்ணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர் நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி பார்த்திபன் எருமைப்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் ரவி பேரூராட்சி தலைவர் காந்தி ஒன்றிய கழக நிர்வாகிகள் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதி இளைஞரணி அமைப்பாளர் செந்தில் மற்றும் திமுக நிர்வாகிகள் உட்படப்பலர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo