நடுவானில் பறந்த விமானத்தை சுட்ட மர்ம நபர்

by Staff / 03-10-2022 12:29:46pm
நடுவானில் பறந்த விமானத்தை சுட்ட மர்ம நபர்

மியான்மரில் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்ட நிலையில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ராணுவ ஆட்சியை எதிர்த்து புரட்சி குழுக்கள் பல்வேறு இடங்களில் இயங்கி வருகிறது. இந்நிலையில் மியான்மர் நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று லோகாவ்கில் அருகே வானில் 3 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துபோது, திடீரென ஒரு துப்பாக்கிக் குண்டு விமானத்தை துளைத்து சென்றது. விமானத்திற்குள் புகுந்த அந்த குண்டு அங்கிருந்த பயணி ஒருவரின் கழுத்தில் தாக்கியதால் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனடியாக விமானம் லோகாவ்கில் தரையிறக்கப்பட்டு, அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விமானத்தை சுட்டது யார் என்பது குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்படுகிறது.

 

Tags :

Share via