வாக்குச்சாவடி முகவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு
கேரளாவின் 20 மக்களவை தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இந்த நிலையில், கோழிக்கோடு மாவட்டம் குற்றிச்சிரா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் இடதுசாரி கூட்டணியின் முகவர் அனீஸ் அகமது (66) என்பவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இன்று காலை வாக்குச்சாவடி அருகே சுருண்டு விழுந்த இவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
Tags :