3 குழந்தைகள் உயிரிழப்பு
திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் செயல்பட்டுவரும் விவேகானந்தா சேவாலய விடுதியில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மூன்று குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடல்நலம் பாதிக்கப்பட்டு, வயிற்றுவலி, வாந்தியால் பாதிக்கப்பட்ட மேலும் ஐந்து பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், இது பற்றி ட்வீட் செய்துள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட சிறுவர்கள் 3 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு சரியான சிகிச்சை அளிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும், இச்சம்பவம் குறித்து முறையான விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Tags :