சிறுவனை வைத்து மந்திரவாதம்
கேரள மாநிலம் பத்தனம் திட்ட மாவட்டத்தில் மலையாலப்புழாவைச் சேர்ந்த தேவகி தனது வீட்டில் இரண்டு சிறுவர்களை வைத்து மர்ம பூசை செய்துள்ளார். இதை கவனித்த அக்கம்பக்கத்தினர் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலிஸார் சம்பவ இடத்திற்குள் வருவதற்குள் அங்கு திரண்ட பொது மக்கள் அந்த பெண்ணின் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடி உள்ளனர். பின்னர் காவல்துறையினர் தேவகியை கைது செய்தனர். தேவகி ஒரு சிறுவனை மந்திரவாதத்தில் ஈடுபடுத்துவதும், அப்போது அந்த சிறுவன் மயங்கி விழும் அதிர்ச்சிகர காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் 2 பெண்களை நரபலி கொடுத்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து இந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :