அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு துப்புரவு பணியாளர்களுக்கு நினைவு கேடயம்
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு சென்னை புழல் கதிர்வேடு பகுதியில் 31வது வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபு தலைமையில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் தங்களது பகுதியில் சிறப்பாக செயல்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு அப்துல் கலாம் நினைவு கேடயம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் சமூக சேவகர் பாபு, மாதவரம் மண்டல அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அப்துல் கலாம் அவர்களின் கனவு திட்டமான 500க்கும் மேற்பட்ட மரக்கன்றை அப்பகுதி முழுவதும் 31 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சங்கீதா பாபு நட்டு வைத்தார்.
Tags :