மனைவிக்கு கத்திக்குத்து
உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள ஆசாத் நகர் பகுதியில், மோனி குப்தா என்ற பெண் தனது கணவன் மனோஜ் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டி "கர்வா சவுத்" விரதம் இருந்தார். அதே சமயம் இவர்களுக்கு திருமணமாகி 22 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், மனோஜ் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் 'கர்வா சவுத்' பண்டிகையின் போது வீட்டிற்கு வந்த மனோஜ், தனது மனைவி மோனி குப்தாவை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். மோனியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்ப்பதற்குள், மனோஜ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். மீட்கப்பட்ட மோனி குப்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைமறைவான கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags :