கோவை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை- பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்.

by Editor / 30-12-2023 10:27:46am
கோவை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை- பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்.

கோவை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார். கோவையில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், 11.30-க்கு பெங்களூரு சென்றடையும். பெங்களூருவில் மதியம் 1.40க்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் இரவு 8 மணிக்கு கோவை வந்தடையும். கோவை - பெங்களூரு இடையே நாள்தோறும் 2 முறை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. ஏற்கனவே சென்னை - கோவை, சென்னை-திருநெல்வேலி, சென்னை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை உள்ளது.

 

Tags : கோவை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை- பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்.

Share via