ஆணவப்பேச்சை ஆளுநர் ரவி நிறுத்த வேண்டும்: சீமான்

by Staff / 07-04-2023 01:51:34pm
ஆணவப்பேச்சை ஆளுநர் ரவி நிறுத்த வேண்டும்: சீமான்

அதிகாரத்திமிரில், தன்னெழுச்சியாக நடைபெற்ற மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதா? தனது ஆணவப்பேச்சை ஆளுநர் ஆர்.என். ரவி இத்தோடு நிறுத்திக் கொள்ளாவிட்டால், தமிழ் மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை, வெளிநாடுகளில் இருந்து பணத்தை பெற்று, மக்களைத் தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிகாரத்திமிரில் பொறுப்புணர்வின்றி, குடிமைப்பணி மாணவர்கள் மத்தியில் நச்சுக்கருத்தை உமிழ்ந்து, தன்னெழுச்சியான மக்கள் போராட்டத்தை இழிவுபடுத்திப் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via