துணை முதல்வர் கைது

by Staff / 16-10-2022 05:05:44pm
 துணை முதல்வர் கைது


டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில், நாளை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு, சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் காலை 11 மணிக்கு ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா, சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்றும், எனது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், எதையும் சிபிஐ கைப்பற்றவில்லை என்றும் தெரிவித்து உள்ளார். சிபிஐ சம்மன் தொடர்பாக ஆம் ஆத்மி மூத்த தலைவர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், "மணீஷ் சிசோடியா நாளை கைது செய்யப்படுவார்" என குற்றம் சாட்டினார்.

 

Tags :

Share via