போக்சோவில் கைது செய்யபட்ட இளைஞர் மீது குண்டர் தடுப்பு சட்டம்

by Staff / 20-10-2022 05:20:32pm
போக்சோவில் கைது செய்யபட்ட இளைஞர் மீது குண்டர் தடுப்பு சட்டம்

மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் மீண்டும் கைது
கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரை போக்சோ சட்டத்தின்படி கைது செய்து சிறையில் அடைத்தனர்

இந்த நிலையில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட பால்ராஜ் மீது குண்டத்தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார் அதன்படி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பால்ராஜ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பேரில் பால்ராஜ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்

 

Tags :

Share via