பழக்கடை ஊழியார் அடித்து கொலை
பொள்ளாச்சி மார்க்கெட் சாலையில் வசித்து வருபவர் குப்புசாமி (வயது 40) இவர் அப்பகுதியில் உள்ள பழக்கடையில் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டின் அருகே ரத்த கரை மற்றும் உடலில்காயங்களுடன்குப்புசாமி இறந்து கிடந்தார்.இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்துக்கு விரைந்த மேற்கு காவல் நிலைய போலீசார்
உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.குப்புசாமி நண்பர்களுடன் மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது அப்போது ஏற்பட்ட தகராறில் குப்புசாமியை மர்ம நபர்கள் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
Tags :