சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்

பத்தனம்திட்டா: சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக பக்தர்களின் தகவல்களை சேகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு தேவையில்லை. சபரிமலை கோயில் கதவுகள் நவம்பர் 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு தரிசனத்திற்காக திறக்கப்படும்.
இதனிடையே நிலக்கல் உள்ளிட்ட 12 இடங்களில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. நிலக்கல்லில் மட்டும் மொத்தம் 10 கவுன்டர்கள் திறக்கப்படும்.“இந்த ஆண்டு தேவஸ்வம் வாரியத்தால் மெய்நிகர் வரிசை முன்பதிவு செய்யப்படுகிறது. இது இலவசம்,'' என, தேவசம் கமிஷனர் பி.எஸ்.பிரகாஷ் தெரிவித்தார்.
பம்பாவில் உள்ள ஆஞ்சநேயா ஆடிட்டோரியத்தில் பக்தர்களின் ஆவணங்கள் காவல்துறையினரால் சரிபார்க்கப்படும். முன்பதிவு செய்ய: sabarimalaonline.org ஐப் பார்வையிடவும்.
Tags :