. காதல் தோல்வியால் இளைஞர் எடுத்த முடிவு
விருதுநகர் மாவட்டம் டி. காமராஜர்புரம் கிராமத்தில் வசித்து வருபவர் கோவில்பிச்சை. இவரது மகன் தேவகுமார் (24) துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவர், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனிடையே தேவகுமாருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்ய முடிவெடுத்து பெண் பார்த்துள்ளனர். இந்நிலையில், தனது பெற்றோரிடம் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்த தேவகுமார், காதலியை சந்தித்து திருமணம் குறித்து பேசியுள்ளார். அப்போது, அந்த பெண் அவரது காதலை ஏற்க மறுத்து, தன்னுடன் பேசுவதை கைவிடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.இதனால், விரக்தியடைந்த தேவகுமார் காதலியின் வீட்டின் முன் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில், தேவகுமார் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :