விடிய விடிய காத்திருந்த பயணிகள்.

by Staff / 23-10-2022 03:36:55pm
விடிய விடிய காத்திருந்த பயணிகள்.

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயிலில் சீட் கிடைக்காததால் விடிய விடிய ரெயிலுக்காக பயணிகள் காத்திருந்தனர். தீபாவளி பண்டிகை நாளை (24-ந் தேதி)வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சொந்த ஊருக்கு ரெயில்களில் செல்ல பயணிகள் கூட்டம் ரெயில் நிலையங்களில் அலை மோதி வருகிறது. சென்னையில் முக்கிய ரெயில் நிலையமாக திகழும் சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் ரெயிலில் பயணம் செய்ய இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். இந்தநிலையில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயிலில் இடம் கிடைக்காததால் பயணிகள் காத்திருந்தனர். அங்குள்ள பிளாட்பாரங்களில் மற்றும் ஓய்வு அறைகளில் ஆயிரக்கணக்கான பயணிகள் மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்தனர்.

 

Tags :

Share via