உலகம் முழுவதும் 77.40 கோடி குழந்தைகள் வறுமையாலும், பருவநிலை நிகழ்வுகளாலும் பாதிப்பு

by Staff / 28-10-2022 12:09:06pm
உலகம் முழுவதும் 77.40 கோடி குழந்தைகள் வறுமையாலும், பருவநிலை நிகழ்வுகளாலும் பாதிப்பு

உலகம் முழுவதும் 77.40 கோடி குழந்தைகள் வறுமையாலும், பருவநிலை நிகழ்வுகளாலும் பாதிக்கப்பட்டு வருவதாக சேவ் தி சில்ட்ரன்" என்ற குழந்தைகள் உரிமை அமைப்பு, பிரசல்ஸ் நகரில் உள்ள விரிஜே பல்கலைக்கழகம் இணைந்து ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

. உலகளவில், கம்போடியாவில் வசிக்கும் குழந்தைகள்தான் வறுமை, பருவநிலை தாக்கம் என இரட்டை அச்சுறுத்தலை சந்திப்பவர்களில் முதலிடத்தில் உள்ளனர்.

அங்கு 72 சதவீத குழந்தைகளும், மியான்மரில் 64 சதவீத குழந்தைகளும், ஆப்கானிஸ்தானில் 57 சதவீத குழந்தைகளும் அச்சுறுத்தலை சந்தித்து வருகின்றனர்

. இந்தியாவில் உள்ள குழந்தைகளில் 51 சதவீதம் பேர், அதாவது 22.20 கோடி குழந்தைகள், வறுமையிலும், பருவநிலை நிகழ்வுகளின் பிடியிலும் வாழ்ந்து வருகிறார்கள்

. கேரளா, அசாம் போன்ற மாநிலங்களில் ஏற்படும் வெள்ள பெருக்கும், ஒடிசாவில் வீசும் புயலும் இந்தியாவில், 35.19 கோடி குழந்தைகள், ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு பருவநிலை நிகழ்வால் பாதிக்கப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது 

 

Tags :

Share via