நகையுடன் ஊழியர் மாயம்
கோவையில் உள்ள பிரபல நகை கடை ஒன்றில் 6,273 கிராம் நகையுடன் அதன் ஊழியர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெலிவரி செய்வதற்காக கடை உரிமையாளர் ரோகின் வசந்த் ஊழியர் நடராஜனை நகையுடன் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் ஊழியர் நகையை தரவில்லை என வாங்கியவரிடம் இருந்து புகார் வந்ததால் நடராஜனை செல்போனில் அழைத்துள்ளார் கடை உரிமையாளர்.
அப்போது நடராஜனின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நகை திருடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் நடராஜனை தேடி வருகின்றனர்
Tags :