மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்த கணவன்
தூத்துக்குடி அண்ணாநகர் தெருவை சேர்ந்தவர் ஆண்டனி ராஜ். குடிக்கு அடிமையான இவர் காதல் மனைவியிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று நடந்த சண்டையில், பட்ட பகலில் நடு ரோட்டில் வைத்து மனைவியின் கழுத்தை ஆக்சா பிளேடு கொண்டு அறுத்து கொலை செய்ய முயன்றார். இதைப் பார்த்து அவரது மனைவி மாதவி கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காப்பாற்றினர்.உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags :