தென்காசிமாவட்டத்தில் 4 நாட்களில்  3648  வாகன விதிமீறல் வழக்கு.

by Editor / 25-10-2023 10:39:48pm
தென்காசிமாவட்டத்தில் 4 நாட்களில்  3648  வாகன விதிமீறல் வழக்கு.

தென்காசி மாவட்டத்தில் நாளுக்கு நாள் பெருகிவரும் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டும். போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றதைத் தொடர்ந்து விதிமுறைகளில் மீறும் வாகனங்களுக்கு அபராதம் மிதிக்கவும் அதிக அளவில் சத்தம் எழுப்பும் புகை போக்கிகளை வைத்திருக்கும் வாகனங்களில் புகை போக்கிகளை அப்புறப்படுத்தவும் தொடர் சோதனைகள் நடத்தவும் உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர் இதன் தொடர்ச்சியாக கடந்த நான்கு நாட்களாக தென்காசி மாவட்டத்தில் போக்குவரத்து காவல்துறையினர், மற்றும் காவல் துறையினர் ஆகியோர் இணைந்து பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.இதன்  தொடர்ச்சியாக ஏராளமான  இருசக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டு அதிக சத்தம் எழுப்பக்கூடிய புகை போக்கிகளையும் அப்புறப்படுத்தியும் சோதனைகளை நடத்திவருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் கடந்த 21 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நான்கு நாட்களில் 3648  வாகனங்கள் விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் 83 இரு சக்கர வாகனங்கள் உரிய அனுமதிகள் இல்லாமல் இயக்கியதும் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் வாகன தணிக்கை நடைபெறும் என்றும் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : தென்காசிமாவட்டத்தில் 4 நாட்களில்  3648  வாகன விதிமீறல் வழக்கு.

Share via